ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,169-க்கு விலை போனது.

திருவாரூர்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,169-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடைபெற்ற நிலையில், தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ஏலச்சீட்டில் எழுதி...

பின்னர் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். அதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 169-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 109-க்கும் விலை போனது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 696-க்கு விற்பனையானது.



Next Story