ரூ.33 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.33 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் ரூ.33 ½ லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் உள்ள திறந்தவெளி கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தினை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் மற்றும் கள அலுவலர் குணபாலன் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டனர்.இந்த ஏலத்தில் குறைந்தபட்ச விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 119 க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 409 க்கும், சராசரி விலையாக ரூ.7 ஆயிரத்து 264 வீதம் 462 குவிண்டால் ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 2 மணிக்கு சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் பருத்தி ஏலம் விடப்படும் என்றும், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் பருத்தி விலைக்கு உரிய தொகையை அன்றைய தினம் அல்லது விடுமுறைநாளாக இருந்தால் மறு வங்கி வேலைநாட்களில் உடனடியாக விவசாயிகள் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story