அரூரில் பருத்தி ஏலம்

அரூர்:-
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தில் 780-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4 ஆயிரத்து 600 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். இந்த வாரம் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 796 முதல் 8 ஆயிரத்து 509 வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் பருத்தி ஏலம் போனது என்று செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





