பேரன் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு


பேரன் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு
x

பேரன் இறப்பிற்கு உரிய இழப்பீடு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர்.

வேலூர்

பேரன் இறப்பிற்கு உரிய இழப்பீடு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர்.

விபத்தில் மரணம்

வேலூர் சைதாப்பேட்டை பழைய முன்சீப் கோர்ட்டு தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. இவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மகன் இறந்த துக்கம் தாளாமல் காஞ்சனாவும் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் காஞ்சனாவின் பெற்றோரான சிட்டிபாபு, லோகம்மாள் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இழப்பீடு

நானும், எனது கணவரும், மகள் கஞ்சனா, பேரன் ஆனந்த் ஆகியோரது அரவணைப்பில் வாழ்ந்து வந்தோம். இருவருமே இறந்து விட்டனர். இதனால் நாங்கள் ஆதரவின்றி வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனது பேரன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால் தொடர்ந்து மோட்டார்சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.

எனவே விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நபர் சார்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் போதிய இழப்பீடு வழங்கவில்லை. எனவே கூடுதல் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


Next Story