தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி கோர்ட்டு உத்தரவு


தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி கோர்ட்டு உத்தரவு
x

தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணையானது யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 17 படகுகள் மீதான விசாரணைக்காக ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜராக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் 14 பேர் கொண்ட மீனவர் குழுவினர் யாழ்ப்பாணம் சென்றனர். அந்த மீனவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜரானார்கள்.

அப்போது ெமாத்தம் 17 படகுகளில், 4 படகுகள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இதற்கான தீர்ப்பு வருகிற 31-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்றும், 10 படகுகள் மீதான வழக்குகளை மார்ச் 1-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடைமை ஆக்குவதாகவும் நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த 3 மீன்பிடி விசைப்படகுகள் இலங்கையின் அரசுடைமையாக்கப்பட்டது, தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story