குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு: பழைய குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க தடை


குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு:  பழைய குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க தடை
x

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலிஅருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில் இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு முதலில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. இடையிடையே சாரல் மழை தூறி குற்றாலம் பகுதியில் ரம்மியமான சூழல் காணப்படுகிறது. அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வந்தனர். இந்த நிலையில், இரவு திடீரென குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், பழைய குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story