3 மாவட்டங்களில் பாதிப்பு: தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா


3 மாவட்டங்களில் பாதிப்பு:  தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. நேற்று திருப்பூரில் மட்டும் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில், இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 பேரும், சேலத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 35 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23-ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story