மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு சாவு


மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு சாவு
x

திருவெண்காடு அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு சாவு

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே நாங்கூர் ஊராட்சிக்குட்பட்ட திருமணிக்கூடம் பகுதியை சேர்ந்த அஜித் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள காட்டில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது. அப்போது மின் கம்பி அறுந்து பசுமாடு மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இறந்த மாட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் பார்த்தார். அப்போது அஜித், இறந்து போன மாட்டுக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story