கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு


கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு
x

சீர்காழியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி சிங்காரத்தோப்பு தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது பசுமாட்டை நேற்று காலை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில் கீழத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக பசுமாடு விழுந்தது. 10அடி பள்ளத்தில் விழுந்த மாட்டின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தனர். பின்னர் தொட்டியில் விழுந்த பசு மாட்டினை மீட்க சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை மீட்க முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் . பசு மாட்டை கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது. மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story