விஷம் கலந்த தண்ணீரை மாடுகள் பலி


விஷம் கலந்த தண்ணீரை மாடுகள் பலி
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷம் கலந்த தண்ணீரை மாடுகள் பலியாகின.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே காணிக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 42). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து கருணாமூர்த்தி மாடுகளை ேதடி சென்றபோது எம்.கரிசல்குளத்தில் 2 மாடுகள் இறந்து கிடந்தன. இறந்த மாடுகள் அருகே விஷம் கலந்த தண்ணீரை குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story