கிரிக்கெட் போட்டி


கிரிக்கெட் போட்டி
x

சோளிங்கரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 4 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சோளிங்கர் பகுதியில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.கோபி தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் எஸ்.அன்பரசு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் எம்.சிவானந்தம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 2 அணிகளுக்கு பரிசு வழங்கினர். வெற்றிபெற்ற இரண்டு அணிகளும் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெறிவித்தனர். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் யாமீன், தணிகை பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story