சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய விழா

பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டலம் -சேகர அளவிலான முதியோர் கூடுகை கிறிஸ்து ஆலயத்தில் நடைபெற்றது. காலை பரி.திருவிருந்து ஆராதனையுடன் தொடங்கியது. கடையம் சேகர தலைவர் கிங்ஸ் ஹேமில்டன் சாமுவேல், சுரண்டையை சேர்ந்த ஆலோசனை உளவியலாளர் ஜோசப்ராஜன் ஆகியோர் அமைதி என்ற கருத்து தலைப்பில் செய்தியை வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேகர குருவானவர் டேனியல் தனசன், சபை ஊழியர்கள், பாவூர்சத்திரம் சபை மக்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





