அண்ணனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் பிளஸ்-2 மாணவனுக்கு வெட்டு


அண்ணனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் பிளஸ்-2 மாணவனுக்கு வெட்டு
x

அண்ணனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் வீட்டில் தூங்கிய பிளஸ்-2 மாணவனை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

பிளஸ்-2 மாணவனுக்கு வெட்டு

சென்னை தண்டையார்பேட்டை விநாயகபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு்க்குள் புகுந்த மர்மநபர்கள், திடீரென மாணவனின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தடுக்க முயன்ற அவருடைய தந்தைக்கும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த தந்தை-மாணவன் இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆள்மாறாட்டம்

மாணவனின் அண்ணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (22), புவனேஷ் (23) ஆகியோருக்கும் ஏரியாவில் யார் பெரிய ஆள்? என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவனின் அண்ணனை குறிவைத்து வந்த இருவரும் ஆள்மாறாட்டத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவருடைய தம்பியான பிளஸ்-2 மாணவனை வெட்டியது தெரிந்தது. இதுபற்றி காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன், புவனேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (48). பூக்கடை பகுதியில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வேலைக்கு வந்த இவருக்கும், கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் (57) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், கத்தியால் ஆறுமுகத்தின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story