வாலிபருக்கு ரம்பத்தால் வெட்டு


வாலிபருக்கு ரம்பத்தால் வெட்டு
x

வாலிபருக்கு ரம்பத்தால் வெட்டு

தஞ்சாவூர்

திருவோணம் அருகே துக்க நிகழ்ச்சியில் வாலிபரை ரம்பத்தால் வெட்டிய தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்

வாலிபருக்கு வெட்டு

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி வடபாதி ஆவனாண்டி கொல்லை கிராமத்தை சேர்ந்த சின்னக்காளை மகன் சூர்யா (வயது22). இவரும், நெய்வேலி தென்பாதி முள்ளுபடிக்கொல்லையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தனியார் வங்கி ஊழியர் ராகுலும் (28) கடந்த 27-ந்தேதி அதே பகுதியில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களும் பங்கேற்று இருந்தனர். அப்போது ராகுல், சூர்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரம் அடைந்த ராகுல் பாடை செய்வதற்காக பயன்படுத்தும் ரம்பத்தை எடுத்து சூர்யாவை தலையில் சராமாரியாக வெட்டினார்.

தனியார் வங்கி ஊழியர் கைது

இதில் தலையில் படுகாயம் அடைந்த சூர்யா பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கி ஊழியர் ராகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story