புயல் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்


புயல் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
x

உத்தரவை மீறி நாளை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் தற்போது 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. 'மிக்ஜம்' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நாளை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story