தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், மேலகருப்பூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இருந்தது. அங்கிருந்து கிராமமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்கள் மூலம் வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். தற்போது அந்த பஸ் நிறுத்த நிழற்குடை இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நிழற்குடை கட்டவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக மேலகருப்பூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேலக்கருப்பூர் கிராமத்திற்கும் மல்லூர் கிராமத்திற்கும் இடையே சர்வீஸ் சாலையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மேலகருப்பூர், அரியலூர்.


Next Story