பரமத்தி அருகே லாரி மீது கார் மோதி தொழிலாளி சாவு

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் வீராசாமி(வயது23). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமத்தி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக வீராசாமி மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





