செட்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


செட்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
x

விக்கிரமங்கலம் அருகே உள்ள செட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழ கோவிந்தபுத்தூர் கிராமத்தின் மையப்பகுதியில் செட்டி ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியில் பல ரகங்களில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. ஏரியை சுற்றி வீடுகள் இருப்பதால் இறந்த மீன்களை உடனடியாக அகற்றிவிட்டு மீன்களின் இறப்பின் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story