லாரி மோதி எல்.ஐ.சி. முகவர் பலி


லாரி மோதி எல்.ஐ.சி. முகவர் பலி
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 15 July 2023 4:34 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி எல்.ஐ.சி. முகவர் பலியானார்.

சேலம்

தலைவாசல்:

தலைவாசலை அடுத்த நத்தக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). எல்.ஐ.சி. முகவர். இவர், ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மாலை 3 மணி அளவில் தலைவாசல் வந்துவிட்டு தனது மோட்டார் சைக்கிள் மூலம் வீட்டுக்கு சென்றார். அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். முன்பு சென்ற போது பின்பக்கம் வந்த லாரி, ராமலிங்கம் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் ராமலிங்கம் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ராமலிங்கத்துக்கு தேன்மொழி என்ற மனைவியும், ராம்குமார் என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். விபத்து குறித்து தலைவாசல் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story