ஆட்டையாம்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


ஆட்டையாம்பட்டி  அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
சேலம்

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டி பேரூராட்சி வேலநத்தம்பாவடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 75). சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நடராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story