மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு


மொபட்டில் இருந்து விழுந்தவர் சாவு
x
சேலம்

சேலம்

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). தொழிலாளி. இவர் நேற்று இரவு மொபட்டில் சொட்டையன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை நடத்திய போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story