வீட்டு மாடி படிக்கட்டில் இருந்து விழுந்து மூதாட்டி சாவு

மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி பெரியத்தாய் (வயது 65). இவர் கடந்த 3 ஆண்டுகளாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மாடியில் ஏறியபோது படிக்கட்டில் இருந்து இருந்து தவறி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியதாய் இறந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





