ஊத்தங்கரை அருகேவிபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
ஊத்தங்கரை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி மஜித் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 30). இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் மோட்டார்சைக்கிளில் பெரிய காமாட்சிப்பட்டி பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே பரிதாகமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story