லளிகம் கிராமத்தில்மாடியில் இருந்து தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி


லளிகம் கிராமத்தில்மாடியில் இருந்து தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி
x
தினத்தந்தி 4 Oct 2023 12:30 AM IST (Updated: 4 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் உள்ள நாவீதர் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). நாதஸ்வர கலைஞர். இந்த நிலையல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் ராமதாஸ் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் அவருடைய கையில் இருந்து நழுவியது. அந்தசமயம் செல்போனை பிடிக்க முயன்றபோது ராமதாஸ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story