நண்பர்களுடன் குளித்த போது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு காவேரிப்பட்டணம் அருகே பரிதாபம்


நண்பர்களுடன் குளித்த போது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு காவேரிப்பட்டணம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 5:10 PM GMT)

காவேரிப்பட்டணம் அருகே நண்பர்களுடன் குளித்த போது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே நண்பர்களுடன் குளித்த போது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பிளஸ்-1 மாணவன்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் உதயகுமார் (வயது16). இவன் பொன்னேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இவன் காவேரிப்பட்டணத்தை அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க நண்பர்களுடன் சென்றான்.

நண்பர்கள் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது உதயகுமார் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றான். அப்போது மாணவன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து உதயகுமாரை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பரிதாபமாக சாவு

பின்னர் அவர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவன் உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவன் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story