மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி சாவு
x

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி இறந்தார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் வெங்கடேசன் (வயது 29), விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். காரிமங்கலம் அருகே மொரப்பூர் சாலையில் தனியார் ஓட்டல் அருகே சென்றபோது எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story