மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டீ மாஸ்டர் பலி


மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டீ மாஸ்டர் பலி
x

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டீ மாஸ்டர் பலி

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சி கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). டீ மாஸ்டர். இவர் கடந்த 15-ந் தேதி மாட்டுக்கு தீவனத்தை கட்டிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் கஞ்சம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டீ மாஸ்டர் பலி



Next Story