தொழிலாளி உள்பட 2 பேர் சாவு


தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:46 PM GMT)

கெலமங்கலம், ஓசூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம், ஓசூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

தொழிலாளி

கெலமங்கலம் அருகே உள்ள பஞ்சாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் பஞ்சாட்சிபுரம் பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடப்பா படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் லேசான காயம் அடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வெங்கடப்பா பரிதாபமாக இறந்தார். மற்றொரு நபர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் சாவு

ஓசூர் அப்பாவு நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). இவர் கடந்த 1-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் ஓசூர் பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் சதீஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story