பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:46 PM GMT)

ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே உள்ள பொம்மதாசம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). விவசாயி. சம்பவத்தன்று இவர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story