விபத்தில் தொழிலாளி சாவு


விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ஓசூர் அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சையத்அசேன் (வயது62). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உப்பரதமண்டரப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில், படுகாயமடைந்த சையத் அசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story