கொசுவலை வியாபாரி மர்மசாவு


கொசுவலை வியாபாரி மர்மசாவு
x
தினத்தந்தி 18 March 2023 7:00 PM GMT (Updated: 18 March 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள கோவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாயக் (வயது 55). கொசு வலை வியாபாரி. இவர் கடந்த 12-ந் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிகம் கிராம நிர்வாக அலுவலர் கிரிஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கோவில் திருவிழாவில் ஒரு சமுதாயத்தினர் வைத்த பேனரில் தங்களுக்கு வேண்டியவரின் பெயரை அச்சடிக்கவில்லை என கூறி உயிரிழந்த ரங்கநாயக் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவில் நடக்கும் நாடகத்திற்கு செல்ல கூடாது என முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அதையும் மீறி ரங்கநாத் நாடகத்தை பார்க்க சென்றதால் அவரை பிடித்து இழுத்து வந்த அவரது உறவினர்கள் தப்பி செல்ல முயன்றதால் அவரை தாக்கியதாவும் அதில் ரங்கநாயக் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story