காரிமங்கலம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை


காரிமங்கலம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 March 2023 7:00 PM GMT (Updated: 26 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன் (வயது 52). விவசாயி. இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாறன் நேற்று வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story