மின்சாரம் தாக்கி பெண் பலிமின்வேலி அமைத்த விவசாயி கைது


மின்சாரம் தாக்கி பெண் பலிமின்வேலி அமைத்த விவசாயி கைது
x
தினத்தந்தி 26 March 2023 7:00 PM GMT (Updated: 26 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சொரகொரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவருடைய மனைவி ராமு (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலை ஏரி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள பெரியமுனிராஜ் (58) என்பவரின் நெல் வயலில் மின்சாரம் தாக்கி ராமு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது கணவர் ராஜவேலு, பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்வேலி அமைத்த விவசாயி பெரிய முனிராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story