கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்
திருப்புவனம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ராமு (வயது 43). தொழிலாளியான இவர் பூவந்தி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று திருப்புவனம் வந்துவிட்டு பூவந்திக்கு மொபட்டில் சென்றார். அப்போது சிவகங்கையில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரான விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (25) மீது பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





