ரெயில் மோதி தொழிலாளி பலி


ரெயில் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Jun 2023 1:00 AM IST (Updated: 15 Jun 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 47). தொழிலாளி. இவர் நேற்று செம்மாண்டப்பட்டி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story