தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு


தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2023 7:00 PM GMT (Updated: 22 Jun 2023 6:53 AM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிட்டேன் நாயக் (வயது 57). இவர் சூளகிரி சாமல்பள்ளம் பகுதியில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி காலை அவர் நிறுவன கேண்டீனில் உணவு சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜிட்டேன் நாயக் இறந்து விட்டார். உடல் நலக்குறைவால் அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story