தண்ணீர் பானைக்குள் விழுந்த ஆண் குழந்தை சாவு


தண்ணீர் பானைக்குள் விழுந்த ஆண் குழந்தை சாவு
x

தண்ணீர் பானைக்குள் விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு திருமணமாகி, 1¼ வயதில் ஹரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் தண்ணீர் இருந்த பானைக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குனிந்தபோது ஹரிஷ், அந்த பானைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஹரிஷை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story