கடலூரில் காவலாளி தவறி விழுந்து சாவு


கடலூரில்  காவலாளி தவறி விழுந்து சாவு
x

கடலூரில் காவலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கடலூர்


கடலூர் சான்றோர்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 65). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, தண்டபாணி நாற்காலியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story