எந்திரத்தில் கை சிக்கியதால் வாலிபர் சாவு


எந்திரத்தில் கை சிக்கியதால் வாலிபர் சாவு
x

எந்திரத்தில் கை சிக்கியதால் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

மதுரை,

பீகாரை சேர்ந்தவர் சூரஜ்குமார்(வயது 23). இவர் மதுரை வண்டியூரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலது கை எந்திரத்தில் சிக்கியது. அதில் அவரது கை துண்டாகி ரத்தம் அதிகமாக வெளியேறியது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story