விஷம் குடித்த முதியவர் சாவு


விஷம் குடித்த முதியவர் சாவு
x

விஷம் குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த சங்கன்திரடு பாரதியார்புரத்தைச் சேர்ந்தவர் நயினார் (வயது 63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்த நிலையில் நயினார் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நயினார் சம்பவத்தன்று திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story