அடையாளம் தெரியாத முதியவர் சாவு


அடையாளம் தெரியாத முதியவர் சாவு
x

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூர் தேரடி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரத்தில் இறந்துகிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story