கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் : தேசிய குழந்தைகள் ஆணையம் வரும் 27ல் ஆய்வு


கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் :  தேசிய குழந்தைகள் ஆணையம் வரும் 27ல் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2022 11:04 AM IST (Updated: 20 July 2022 11:07 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன், அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது.

1 More update

Next Story