பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 6:45 PM GMT)

பெண்ணுக்கு கொலை மிரட்டல் கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே வளவனூர் காந்திநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி மனைவி தமிழரசி(வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆன நாள் முதல் சஞ்சீவி(35), இவரது தாய் ஜெயலட்சுமி, தந்தை ராஜேந்திரன், சகோதரிகள் சரண்யா, ஹரிவிஜிதீபா ஆகியோர் சேர்ந்து தமிழரசியிடம், திருமணத்தின்போது என்ன சீர்வரிசை கொண்டு வந்தாய் என அடிக்கடி கேட்டு பிரச்சினை செய்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழரசிக்கு வளைகாப்பு விழா நடத்தி முடித்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் சஞ்சீவி உள்ளிட்ட 5 பேரும் தமிழரசியின் பெண் குழந்தையை பார்க்க சென்றனர். அப்போது தமிழரசியை அவர்கள் 5 பேரும் சேர்ந்து திட்டி எங்கள் குடும்பத்திற்கு வாழ வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் சஞ்சீவி உள்பட 5 பேர் மீதும் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story