பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தாய்-மகன் மீது வழக்கு

மானூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மானூர்:
மானூர் அருகே கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் சசி கண்ணன் (வயது 24). இவர் பிளஸ்-2 மாணவியை கேலி கிண்டல் செய்ததாகவும், அதனை மாணவியின் தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சசி கண்ணன், அவருடைய தாயார் முத்துமாரி ஆகிய 2 பேரும் பிளஸ்-2 மாணவியின் வீட்டுக்கு சென்று, மாணவியின் தாயாரை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சசி கண்ணன், முத்துமாரி ஆகிய 2 பேர் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





