சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு.!


சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு.!
x

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

சிவகாசி,

சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து 3 பேரும் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், காயமடைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.


Next Story