உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்


உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்
x

உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர்

உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

வனவிலங்குகள்

பரந்து விரிந்த மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் சிறு பகுதியே ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகும். இங்கு அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீரை அளித்து வனப்பகுதி அடைக்கலம் கொடுத்து வருகிறது.

பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது. இதனால் வனம் படிப்படியாக அதன் இயல்பு தன்மையை இழந்து விடுகிறது. அவற்றில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து போகிறது. இதனால் உணவு, தண்ணீருக்காக அல்லல்படும் வனவிலங்குகள் வேறு வழியின்றி அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்து வந்து விடுகிறது. அவற்றுக்கு அமராவதி அணையும் அடைக்கலம் கொடுத்து உதவி புரிகிறது.

உலா வரும் கரடி

வன விலங்குகள் உடுமலை- மூணாறு சாலை மலையடிவாரப் பகுதியில் ஜாலியாக உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் உடுமலை மூணாறு சாலையில் இரவு நேரத்தில் கரடி ஒன்று உலா வருகிறது. வாகனங்களை கூட பொருட்படுத்தாமல் சாலையை ஆக்கிரமித்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். அப்போது வாகன ஓட்டி எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளும் வனப்பகுதிக்கு திரும்பிச் செல்ல மனமில்லாமல் அடிவாரப் பகுதியிலேயே வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு உள்ளது. சாலையை கடக்கும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிட்டத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. கன மழை பெய்து வனப்பகுதி பசுமைக்கு திரும்புமா? என்பது இயற்கையின் கையில் தான் உள்ளது.


Related Tags :
Next Story