அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் காயமடைந்தது.
சாத்தூர்,
சாத்தூர்-சிவகாசி சாலையில் வீரபாண்டியபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் படுகாயம் அடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த மானுக்கு உரிய சிகிச்சை அளித்து எட்டூர்வட்டம் கண்மாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





