பொம்மிடியில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்


பொம்மிடியில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

நீதிபதி மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்த தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று அதை நடைமுறைபடுத்த கோரி தலித் கிறிஸ்தவர்கள் நாடு முழுவதும் நேற்று கறுப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி தர்மபுரி மறை மாவட்ட தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பொம்மிடியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். தமிழக ஆயர் பேரவையின் எஸ்.சி. எஸ்.டி. பணிக்குழு மாநில பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். கவிஞர் அன்பு தீபன் கலந்து கொண்டு பேசினார். இதில் பொம்மிடி, பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி மறை மாவட்ட எஸ்.டி, எஸ்.டி. பணிக்குழு செயலாளர் பாதர் மோசஸ் நன்றி கூறினார்.


Next Story