கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி, மாவட்ட இணைச் செயலாளர்கள் லட்சுமி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாவட்டத்தலைவர் சரவணன், நகராட்சி மாநகராட்சி சங்க துணைத்தலைவர் வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில துணைத்தலைவர் மஞ்சுளா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், 40 ஆண்டுகால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதையும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும. காலி பணியிடங்ளை நிரப்பிட வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.


Next Story