பென்னாகரத்தில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பென்னாகரத்தில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பென்னாகரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

பென்னாகரம்

பென்னாகரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் மணி தலைமை தாங்கினார், வட்டார செயலாளர் சாமிநாதன், முன்னாள் வட்டாரத்தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் பழனி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி (பி.எட்) மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story